Tuesday 19 March 2013

[KM] Keep_Mailing முதிய வயது தமிழறிஞர்கள் - நீங்கள் அவர்களுக்கு ஊக்கம் தருவீர்களா ?

வணக்கம் 

நான் தமிழ் அறிஞரெல்லாம் கிடையாது

அப்படி அறிமுகம் செய்துகொள்ள எனக்கு நாட்டமும் இல்லை ( ஒரு வகையில் எனக்கு அந்த தகுதியும் இல்லை ) ( இந்த மூணு சுழி ரெண்டு சுழி பிரச்சனை இன்னமும் எனக்கு இருக்கு) 

தமிழுக்காக சத்தியமாக உயிரையெல்லாம் கொடுக்க மாட்டேன்  

விளையாட்டாக நான் துவங்கிய அறிவியல் தமிழ் மன்றம் இப்பொழுது நான் திட்டமிடாத பாதைகளில் என்னை அழைத்துச் செல்கிறது 

எனது நலம்விரும்பி ஒருவர், அவர்கூட தமிழறிஞர் இல்லை (ஒரு வங்கி ஊழியர்) சென்ற வாரம் என்னை அழைத்து "ஒரு முதிய வயதுடைய தமிழ் அறிஞர் உள்ளார் , நீங்கள் ஏன் அவரை பதிய கூடாது ? என்று கேட்டார் .

அவர் சன் டிவி , தமிழன் டிவி , மக்கள் டிவி, புதிய தலைமுறை டிவி -  எதிலாவது வந்துள்ளாரா ? என்று கேட்டேன் ?

எதிலும் இல்லை - இது பதில் 


சரி அப்படியென்றால் அவரையும் பதிந்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்து ஒரு நாள் அவரது சிந்தனைகளை பதிந்து ஒரு விழியம் உருவாக்கினேன் 

( சோப்பு , சீப்பு , கண்ணாடி , ஷாம்பூ , விற்கும் நிறுவனங்கள் முதிய தமிழ் அறிஞர்களை பதிவு செய்து வெளியிட காசு கொடுக்க மாட்டார்கள் )


(டாக்டர், நீங்க சொல்ற இவர்களையெல்லாம் டிவியில் காட்டினால் , யார் பார்பார்கள் ? - Who will sponsor them ? , what will happen to the channel ratings , No No , we will always show scholars who are looking good " என்று ஒருவர்    சொன்னதுதான் என்னை இந்த You Tube Channel துவங்க வைத்தது. )

அவருக்கு ஒரு நன்றி.





இந்த விழியத்தை பார்த்து , இப்படி ஒரு கடிதம் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு தமிழரிடம் இருந்து வந்துள்ளது 


Dear Dr. Semmal
 
I am very happy to note that Thiru R.Kannan is responsible for the sucessful conduct of the Ralway Tamil Sangam.
I would like to felicitate him. Will you send his contact address, telephone etc.
He is the living legend of propagating Tamil.  I wish that the future generation should recognise and respect him
Once again I thank you for this vital information onThiru R.Kannan.  I wish him good health and long life.
 
N.Kailasam
France 



இப்போ , எனக்கு ஒரு சிந்தனை வருகிறது 

முதிய தமிழ் அறிஞர்களை நான் பதிவு செய்து வைத்தால் 

நீங்கள் அவர்களுக்கு ஊக்கம் தருவீர்களா ?

I believe that calling a land line number in India  from USA , Europe is much cheaper - In that case why not the Tamils from these countries develop the habit of calling and speaking to the Aged Tamil scholars in India via phone

That will surely keep the real scholars very happy with high morale.

வெளிநாட்டில் இருந்து யாராவது  என்னை அழைத்து பேசினால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்பொழுது , இதுபோன்ற தமிழுக்கு நிறைய செய்துள்ள அறிஞர்களுக்கு இன்னமும் நிறையவே அது மகிழ்ச்சியை தரும் அல்லவா ?

பத்து நாளைக்கு ஒரு முறை இதுபோன்ற அறிஞர்களிடம் ஐந்து நிமிடம் அழைத்து பேசும் பழக்கத்தை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது ?

சொந்தகாரர்களிடம் மட்டும்தான் அழைத்து பேசவேண்டும் என்று யார் சட்டம் போட்டது ?

( எப்படியும் சொந்தக்காரர்கள் அதிகம் உங்களை வாழ்த்தமாட்டார்கள் - அம்மா அப்பாவை தவிர ) 

இதுபோன்ற முதியவர்கள் வாழ்த்தினால் உங்களுக்கும் அது மகிழ்வை தரும் 

தமிழ்க்காக உயிரை கொடுக்கவேண்டும் என்று உறுதியாக இருப்பவர்கள் முதலில் ஐந்து நிமிடம் Phone  பேசுங்கள் ........


Pulavar Kannan 
Old number 27
New Number 44
First Main road
Jawahar Nagar 
Chennai -  600082


புரட்சி என்பது யாரோ , எங்கோ செய்வது அல்ல - சாமானியர்கள் உணர்வுடன் செய்யும் வெளிப்பாடுகளே புரட்சியாக மருவும் ..........



இப்போதெல்லாம் என்னன்னு தெரியல ... நிறைய பஞ்ச் டயலாக்யெல்லாம் தானாகவே வருது பாஸ் 


செம்மல் 

--
--
To post to this group, send email to keep_mailing@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "keep_mailing" group.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
 
 

No comments:

Post a Comment